பாம்புகள்! (snakes)

குளிர்ரத்த பிராணிகளாக அறியப்படும் பாம்புகள் பூமியில் இல்லாத இடங்கள் தான் அபூர்வம், பொதுவாக உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து இடங்களிலும் சமாளித்து வாழக்கூடிய விலங்கு பாம்பு!, பல்லி இனத்தின் கால் இல்லாத நீட்சியா, அல்லது கால் முளைத்த பாம்பு தான் பல்லியா என அவ்வபோது விவாதம் நடக்கும், ஆனாலும் அறிவியல், முதலில் காலுடன் இருந்த பல்லியினம் உயிர் பிழைக்க மண்ணுக்கு அடியில் வாழ வேண்டி பழகியது, அதனால் கூரிய கண் பார்வையையும், கால்களையும் இழந்து, அதற்கு பதிலாக நுகரும் சக்தியையும், தரையில் தெரியும் சிறிய அதிர்வுகளையும் அறியும் சக்தி பெற்றது என்கிறது!

சில பாம்புகளுக்கு விஷம் இருப்பது படைப்பின் அற்புதம் என சிலர் சிலாகித்து கொண்டாலும், அவையும் பரிணாமவளர்ச்சியின் ஒரு அங்கம் என்பது அறிவியல் உண்மை! நமக்கு விஷமாக தெரியும் அவை பாம்புகளுக்கு ஊறும் என்சைம்!, நமக்கு இரைப்பையில் ஊறும் ஒரு என்சைம் சாதாரண தோலில் பட்டால் அதை முழுவதுமாக அரித்து விடும், அதே போல் தான் சில விலங்குகளின் விஷமும்!, ஒருமுறை குவியலில் venom மற்றும் poison க்கு உள்ள வித்தியாசம் கேட்டிருந்தேன், என்சைம்களால் அவை வேறுபட்டிருந்தாலும் , காமனான வித்தியாசம், வெனோம் என அழைக்கபடுவது ரத்தத்தில் ஏற்றப்படுவதால் உயிரிழப்பை ஏற்படுத்தும், பாய்ஷன் குடிப்பதால் ஏற்படுத்தும்!, பாம்பின் விஷம் உயிர்காக்கும் மருந்தாக பயன்படுவது பலரும் அறிந்ததே!, பாம்பின் விஷக்கடிக்கு அட்ரோபைன் என்னும் இன்னொரு தாவர விஷம் மருந்தாக தரப்படுகிறது!, விஷமுறிவுக்கு பரவலாக அறியப்பட்ட மருந்து அட்ரோபைன்!


துப்புவதால் விஷத்தை எதிரியின் மேல் இந்த பாம்பு தெளிக்கும், கோப்ரா(நாகம்)வகையை சேர்ந்தது, ஒரு துளி விஷம் கண் பார்வையை பறிக்கும்!

எது அதிக விஷமுள்ள பாம்பு என பலருக்கு ஏற்பட்ட சர்ச்சைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்!, அளவில் அதிக விஷமுள்ளது ராஜநாகம், அதிலிருக்கும் விஷம் ஒரு யானையை கொல்வதற்க்கு போதுமானது, ஆனால் பொதுவாக ராஜநாகம் நகர்புறம் பக்கம் வருவதில்லை என்பதால் அதனால் உயிரிழப்புகள் குறைவு, சிறிது அளவானாலும் வீரியமிக்க விஷம் கொண்டது தைப்பேன் வகையை சேர்ந்த பாம்பு! கடித்த ஐந்து நிமிடத்திற்குள் உயிர் போய்விடும்! உலகில் வேகமான விஷமுள்ள பாம்பு, “ப்ளாக் மாம்பா” மணிக்கு 20 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது!, ஆனாலும் உலகம் மொத்தம் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பாம்பு விரியன் வகைகளே!, இந்தியாவில் இருக்கும், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மற்றும் பாலைவன பாம்புகளாக அறியபட்ட கிளுகிளுப்பை பாம்பு அனைத்தும் விரியன் குடும்பத்தை சேர்ந்ததே!

உலகில் மிக புத்திசாலியாக அறியபட்ட பாம்பாக விரியன் வகைகளை தான் சொல்கிறார்கள்! சுற்றுவட்டாரம் 50 மீட்டர் சுற்றளவில் நடக்கும் அதிர்வுகளை அறிய கூடிய தன்மை உண்டு!, தனது பிளவுபட்ட நாக்குகள் மூலம் காற்றில் உள்ள வாசனையை உணர்ந்து எதிரியின் தன்மை, அவைகள் உணவுக்கு ஆகுமா என பகுத்தறியும் தன்மையும் உண்டு!, அமெரிக்க ராணுவம் தற்பொழுது இவ்வகை பாம்புகளை தான் ரேடாருக்கு மாற்று சக்தி கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறது!

விஷமற்ற பாம்பாக இருந்தாலும் மனிதனை பயமுறுத்துவதில் அனகோண்டா பெரும்பேர் பெற்றது!,” ஆனைகொண்டான்” என்பதில் இருந்து மறுவிய பெயர் என சங்ககால இலக்கியங்களை காட்டினாலும், அவை மலைப்பாம்புகளையே குறிக்கும் என்பது அறிவியல் கூற்று! அனகோண்டா வகை பாம்புகள் தெனஅமெரிக்காவின் பிரேசில் காடுகளில் மட்டுமே காணப்படுவது இதற்கு சாட்சி! பிரேசிலில் இருக்கும் அமேசான் காடுகளில் மட்டும், பூமியில் நாம் அறிந்த உயிரினங்கள் அளவுக்கு அறியபடாத உயிரினங்கள் வாழ்வதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்!



மனிதனை தவிர வேறு எந்த விலங்குகளூம் தன் இனத்தை சேர்ந்த உயிரினத்தை கொல்வதில்லை என சர்வமுக்தி பெற்ற மிட்நைட் சாமியார்கள் திருவாய் மொழிவார்கள், ஆனால் அது உண்மையல்ல! துணைதேடும் ஆண் ராஜநாகம், சரியான துணை கிடைக்காத பட்சத்தில் எதிர்படும் எந்த பெண் ராஜநாகமாக இருந்தாலும் கொன்று விடும்!, மேலும் ராஜநாகத்திற்கு பிரதான உணவே சாரைபாம்பு என அழைக்கப்படும்
“ரேட் ஸ்னேக்” தான்! கருவுற்ற ராஜநாகங்கள் பாம்பினத்திலேயே வித்தியாசமாக கீழே கிடக்கும் சருகுகளால் கூடு அமைத்து முட்டையிட்டு அடைகாக்கும் என்பது பாம்பின ஆச்சர்யம், 40 நாள் கழித்து முட்டையை உடைத்து வரும் குட்டி ராஜநாகம் அப்போது கடித்தாலும் விஷம் இருக்கும் என்பது எச்சரிக்கை!


பாம்புகளை பற்றிய மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை! இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் பல தேசங்களில் பாம்புகள் தெய்வமாக வணக்கபடுகிறது, ஆபிரஹாம மதங்களில் பாம்பு சைத்தானின் குறியீடு, அவையல்லாது சாரை பாம்பின் வாலை தடவினால் சாம்பார் ருசியாக இருக்கும் என பத்து ருபாயில் ஆரம்பித்து, ராஜ மாணிக்ககல் பல லட்சம் மதிப்புள்ளது என கல்லுக்கு அடியில் LED லைட் வைத்து படம் காட்டி ஏமாற்றும் கூட்டமும் நிறைய உள்ளது! அதில் ஏமாந்தவர்கள் கடைசி வரை அபபடி ஒன்னு இருக்கு, ஆனா இவன் வேற கல்லை காட்டி என்னை ஏமாத்திட்டான்னு சொல்லும் போது பாவமாக இருக்கும்!, சமீபகாலமாக மண்ணூளி பாம்பு என்ற வகை மருத்துவ குணங்களுக்காக சீனாவிற்கு கடத்தபடுவதாக சொல்கிறார்கள்! இதுவரை அவற்றால் எந்த ஒரு பயனும் இருப்பதாக அறிவியல் சொல்லவில்லை! ஆனால் மூட நம்பிக்கைகள் மனிதனின் பிரதான குணம் என்று ஆகிவிட்ட படியால் அறிவியல் கூற்றுகள் அவர்களுக்கு உளரலாக தன் தெரியும்!


பாம்புகள் பற்றிய தமிழ் விக்கிபீடியா தகவல்

பாம்புகள் பற்றிய ஆங்கில விக்கிபீடியா தகவல்

விஷபாம்புகள் பற்றிய ஆங்கில விக்கிபீடியா தகவல்

அட்ரோபைன் பற்றிய ஆங்கில விக்கிபீடியா தகவல்


நண்பர்கள் பாம்புகள் பற்றி எழுதியிருப்பின் சுட்டி கொடுத்தால் பதிவில் இணைத்து விடலாம்!

122 வாங்கிகட்டி கொண்டது:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட.. நாந்தான் பஸ்ட்.. ஹா..ஹா

Rajan said...

டிஸ்கவரி சேனல தமிழ்ல போட ஆரமிச்சாலும் ஆரமிச்சானுங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி

Aba said...

நல்லா இருக்கு பாம்பு ஸ்டில்ஸ்.......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆமா தல்.. பாம்பு பால் குடிப்பதை பற்றி சொல்லவேயில்லை?

ஏன் நாக தோசமா?..

Rajan said...

ஏன் தல ! எல்லா உயிரினத்துலையும் விசம், கொடுக்கு .... பு .. அட விடுங்கப்பா புசு புசு முடின்னு (!) ஏதாவது மேட்டர் இருக்கத்தான் செய்யும். அதுகளுக்கு அது சாதாரணம் நமக்கு அனாயாசம். அதுக்கு போயி பசி நேரத்துல இப்பிடி மொக்கையப்போடறீங்களே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மந்திரம் சொன்னா... ஏறுன விசம் இறங்குமாமே.. ஏன் அதை பற்றி எழுதவில்லை?..

ஏன்...ஏன்...ஏன்...ஏன்...?

மோனி said...

ஓக்கே.. ரைட்டு..

போயி
நாளைக்கு ஈரோட்டுல நடக்க இருக்குற மிகப்பிரம்மாண்டமான “பிறந்த நாள் விழா”வை கவனிங்க தல..

அத விட்டுட்டு..
பாம்பு - பல்லின்னுட்டு..

என்னாதிது சின்னப்புள்ள தனமா இருக்கு...

சைவகொத்துப்பரோட்டா said...

//முட்டையை உடைத்து வரும் குட்டி ராஜநாகம் அப்போது கடித்தாலும் விஷம் இருக்கும் என்பது எச்சரிக்கை!//

விஷ(ம) குட்டியா
இருக்கும் போல.

Anonymous said...

அப்ப பாம்பு முட்டை சாப்பிடாதா!!!??

மோனி said...

மீனு,
தவக்களை,
பாம்பு-ன்னு
வரிசையா
3 பதிவும் ஒரே கவுச்சியா இருக்குப்பா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சின்ன பொண்ணு, வால் பையனுக்கு, பண மாலைய போடுவதா வேண்டுதலாம்.

அநேகமா, நாளை, ஸ்மார்ட், மற்றும் சின்ன குட்டி, ஈரோடு வருவதாக, உளவுதுறை குறிப்பு சொல்கிறது..

Rajan said...

மண்ணுளி பாம்பு போட்டோ உங்க வீட்டுல எடுத்தா மாதிரி தெரியுது !

( டேய் மாப்ள ! இந்தாளு எவங்கிட்டயோ டபுள் எஞ்சின் பாம்பு வாங்கி ஏமாந்து இருக்கான்டா . இங்க எவனுக்கோ நடந்தா மாதிரி மெச்ச பண்ணிட்டு இருக்காப்ல )

மோனி said...

முக்கியமான மேட்டர் இருக்கு..
மறக்காம போயி பாருங்கப்பா..

http://monycoimbatore.wordpress.com/2010/04/13/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/

ஒரு வெளம்பரம்தான்..

மோனி said...

மூட நம்பிக்கைகள் மனிதனின் பிரதான குணம் என்று ஆகிவிட்ட படியால் அறிவியல் கூற்றுகள் அவர்களுக்கு உளறலாக தன் தெரியும்!

- This is வால் TOUCH...

பித்தனின் வாக்கு said...

// சொல்லியாச்சா ! கெளம்புங்க டீ ஆறிடப் போவுது //

என்ன இராஜன் உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? ஈரோட்டுக்கு வந்தால் சரக்கு கிடைக்குமுன்னு பார்த்தால், இப்படி டீ மட்டும் கொடுத்து துரத்தி விடுவீர்கள் போல.

Rajan said...

//என்ன இராஜன் உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? //

அது இருக்குது ஒரு மொழத்துக்கு ! உங்களுக்கு அதுல எடமும் என்னைக்கும் உண்டு !


//ஈரோட்டுக்கு வந்தால் சரக்கு கிடைக்குமுன்னு பார்த்தால், இப்படி டீ மட்டும் கொடுத்து துரத்தி விடுவீர்கள் போல.//


ஈரோட்டுல கால் வெச்சவங்க தார் ரோட்டுல தலைய வெக்காம போறது இல்ல ! வாங்க வாங்க

பித்தனின் வாக்கு said...

பாம்புகள் கதைகள் மற்றும் பக்தி பயத்தால் வந்தவை. ஆனா வால்ஸ் மன்னுளி பாம்பின் உடலில் புணுகு பூனை போல இரு அமிலம் சுரக்கின்றது. அதும் மருத்துவ குணம் கொண்டது. ஆதலால் அது கடத்தப் படுகின்றது என்று படித்தேன். படங்கள் அருமை. நெட்டில் பார்த்து ஒரு இராஜ நாகத்தின் படத்தையும் போட்டுருக்கலாமே.

ஆமா காடும் காடு சார்ந்த வாழ்க்கையும் ஒரு தொடர் போட்டிங்களே என்ன ஆச்சு. இரண்டு மூன்று பதிவுகளுக்கு அப்புறம் வரவில்லை போல, இல்லை முடிந்ததா?

யாசவி said...

nice article

Vaal what happened so serious pathivu?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பித்தனின் வாக்கு said...

பாம்புகள் கதைகள் மற்றும் பக்தி பயத்தால் வந்தவை. ஆனா வால்ஸ் மன்னுளி பாம்பின் உடலில் புணுகு பூனை போல இரு அமிலம் சுரக்கின்றது. அதும் மருத்துவ குணம் கொண்டது. ஆதலால் அது கடத்தப் படுகின்றது என்று படித்தேன். படங்கள் அருமை. நெட்டில் பார்த்து ஒரு இராஜ நாகத்தின் படத்தையும் போட்டுருக்கலாமே.
//


வாலு, அஞ்சு தல நாகத்தை தேடிப் போயிருக்காரு பித்தன் சார்..

ஹேமா said...

பாம்புக்கதை நல்லா இருக்கு.நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.

பால் உண்மையாவே பால் குடிக்குமா?எங்கேயோ படித்த ஞாபகம்.பாம்புக்கு உறிஞ்சிக் குடிக்கும் சக்தி இல்லையென்று.சரியா ?

VISA said...

தங்கச்சிய பாம்பு கச்சிசுப்பா.....

வால் ஏன் இந்த பாம்பு வெறி.

உமர் | Umar said...

//மனிதனை தவிர வேறு எந்த விலங்குகளூம் தன் இனத்தை சேர்ந்த உயிரினத்தை கொல்வதில்லை என சர்வமுக்தி பெற்ற மிட்நைட் சாமியார்கள் திருவாய் மொழிவார்கள், ஆனால் அது உண்மையல்ல!//

மீன்களிலும் பல வகை மீன்கள், சிறிய மீன்களையே உணவாக உட்கொள்ளுகின்றன.

Raju said...

\\இரைப்பையில் ஊறும் ஒரு என்சைம் சாதாரண தோளில் பட்டால் அதை முழுவதுமாக அரித்து விடும்,\\

முண்டா பனியன் போட்ட தோள்ல வச்சா அரிக்காதா..?

உமர் | Umar said...

//அநேகமா, நாளை, ஸ்மார்ட், மற்றும் சின்ன குட்டி, ஈரோடு வருவதாக, உளவுதுறை குறிப்பு சொல்கிறது..
//

கெரகம் கரகம் ஆடுறதா ஏதும் உளவுத்துறை குறிப்பு இருக்கா?

Ahamed irshad said...

2வது படம் திகில் தல....

உமர் | Umar said...

//ஈரோட்டுல கால் வெச்சவங்க தார் ரோட்டுல தலைய வெக்காம போறது இல்ல ! வாங்க வாங்க//

சண்முகா லாட்ஜ் உள்ளேயும் தார் ரோடு போட்டிருக்காங்களா?

உமர் | Umar said...

//இரைப்பையில் ஊறும் ஒரு என்சைம் சாதாரண தோளில் பட்டால் அதை முழுவதுமாக அரித்து விடும்//

அப்ப மலக்குங்க கதி?

அகல்விளக்கு said...

//போயி
நாளைக்கு ஈரோட்டுல நடக்க இருக்குற மிகப்பிரம்மாண்டமான “பிறந்த நாள் விழா”வை கவனிங்க தல..

அத விட்டுட்டு..
பாம்பு - பல்லின்னுட்டு..//

அதானே.....

அகல்விளக்கு said...

கடைசி வரைக்கும் இங்க யாரு ஸ்னேக் பாபுன்னு சொல்லாம விட்டுட்டீங்களே தல......

சசிகுமார் said...

என்ன தொழில மாத்தியாச்சா ஒரே பாம்பு வாசனை வருது, நண்பா தாழம்பூ வாசம் பாம்புகளுக்கு மிகவும் பிடிக்குமாமே உண்மையாகவா?

பனித்துளி சங்கர் said...

////////துப்புவதால் விஷத்தை எதிரியின் மேல் இந்த பாம்பு கோப்ரா(நாகம்)வகையை சேர்ந்தது, ஒரு துளி விஷம் கண் பார்வையை பறிக்கும்!
/////////

மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

Rajan said...

//அப்ப மலக்குங்க கதி?//

ஜலக்கு திக்கு லாஜா !

Rajan said...

//ஆமா தல்.. பாம்பு பால் குடிப்பதை பற்றி சொல்லவேயில்லை?

ஏன் நாக தோசமா?..//


ஆமா .... வாழு சின்ன வயசுல ஜில்பான்சி பண்ணிட்டு இருந்த ரெண்டு பாம்புகள கவட்டைல அடிச்சு தொரத்திட்டாறு . ஆண் பாம்புக்கு படாத எடத்துல கல்லு பட்டு பொட்டுன்னு போயிடுச்சு ! அந்த பெண் பாம்பு இருபது வருசமா விடாம தொரத்திட்டு இருக்கு . இப்ப அந்த இச்சாதாரிப் பாம்போட ஆவி சின்னப் பொண்ணுக்குள்ள பூந்துருக்குது .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜன் said...
பெண் பாம்பு இருபது வருசமா விடாம தொரத்திட்டு இருக்கு . இப்ப அந்த இச்சாதாரிப் பாம்போட ஆவி சின்னப் பொண்ணுக்குள்ள பூந்துருக்குது .
//

அப்ப அதை வெச்சு, இரண்டு சினிமா எடுக்கலாமுனு சொல்லுங்க..

அமுதா கிருஷ்ணா said...

நேற்று ராத்திரி 10 மணியளவில் என் பையனுடன் வீட்டிற்கு வரும் போது திண்ணையில் செருப்பினை கழட்டும் போது சரியாய் ஒரு குட்டி பாம்பினை மிதித்து செருப்பை கழட்டினேன். நான் குதித்து ஓடி விட அது ஒரு ஷீவிற்குள் புகுந்துக் கொண்டது. அப்புறம் அந்த பாம்பை துரத்தி விட்டோம். காலையில் பதிவில் பார்த்தால் பாம்பு பற்றி...போச்சு நாக தோஷம் தான் போல் இருக்கு....

Rajan said...

//அப்ப அதை வெச்சு, இரண்டு சினிமா எடுக்கலாமுனு சொல்லுங்க..//

ஆமா ! பயங்கர திகிலா இருக்கும்

க.பாலாசி said...

//ஆனைகொண்டான்//

நன்றி....

Rajan said...

எங்கைய்யா கட ஓனர் !

பாம்பு பல்லி நட்டு வாக்களினு பதிவப் போட்டுட்டு ஆளு எஸ்கேப்பா

Rajan said...

இத்தன நொர நாட்டியம் பேச தெரியுதுல்ல இந்த கேள்விக்கு பத்தி சொல்லுய்யா ..

பாம்பு புத்துக்குள்ள போனதும் நேரா போகுமா தலையத் திருப்பிக்குமா ?

Rajan said...

அடுத்த கேள்வி

சிவ பெருமான் உடம்பில் மொத்தம் எத்தனை பாம்புகள் ?

வால்பையன் said...

//பாம்பு புத்துக்குள்ள போனதும் நேரா போகுமா தலையத் திருப்பிக்குமா ? //

நேராத்தான் போகும், ஆனால் ஏன் தலையை திருப்புதுனு தெரியலையே தல!

உமர் | Umar said...

//சிவ பெருமான் உடம்பில் மொத்தம் எத்தனை பாம்புகள் ?//

சிலுக்கிடம் கேட்க வேண்டிய கேள்வி

Rajan said...

//நேராத்தான் போகும், ஆனால் ஏன் தலையை திருப்புதுனு தெரியலையே தல!

//

உள்ள ஒரே இருட்டா இருக்கும் அதன் மூஞ்சியத் திருப்பிக்கும் ! முன்ன பின்ன புத்தப் பாத்திருந்தா தெரிஞ்சிருக்கும்

வால்பையன் said...

பாம்பு நீர் குடிக்கும், ஆனால் பால் குடிக்காது, அருகில் வந்து என்னவென்று பார்ப்பதை தான் குடிக்கிறது என்று படம் எடுத்து போடுவார்கள்!

பல பாம்புகளுக்கு முக்கிய உணவே சிறு பறவைகளும், முட்டைகளும் தான், ஆனால் நல்லபாம்பு புற்றின்மேல் இருக்கும் வொயிட்லக்கான் முட்டையை லேசாக உடைத்து உறிஞ்சி குடிக்காது, முக்கியமாக நல்ல பாம்பு முட்டை குடித்ததாக ஆதாரம் இல்லை!
மற்ற பாம்புகள் முட்டையை முழுதாக விழுங்கி பின் உடலை வளைத்து உடைத்து உள்ளிருக்கும் புரோட்டீன்களை எடுத்து கொண்டு ஓட்டை துப்பிவிடும்!

Rajan said...

//சிலுக்கிடம் கேட்க வேண்டிய கேள்வி//

கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியல ! மறைமுகமா என்ன சாகச் சொல்றது குள்ளநரித் தனமில்லாமல் வேறென்ன

வால்பையன் said...

//உள்ள ஒரே இருட்டா இருக்கும் அதன் மூஞ்சியத் திருப்பிக்கும் ! முன்ன பின்ன புத்தப் பாத்திருந்தா தெரிஞ்சிருக்கும்//

அதுவும் சரிதான் தல! ”நல்ல” பாம்புகள் அடிக்கடி புற்று மாத்துமாம்!

வால்பையன் said...

//கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியல ! மறைமுகமா என்ன சாகச் சொல்றது குள்ளநரித் தனமில்லாமல் வேறென்ன //

சிலுக்கு எங்கிருக்காலோ, அதுதான் உண்மையான சொர்க்கம்! நீங்களா போறிங்களா, அனுப்பி வைக்கட்டுமா!?

Rajan said...

//அதுவும் சரிதான் தல! ”நல்ல” பாம்புகள் அடிக்கடி புற்று மாத்துமாம்!

//

பாம்புக்குனு புத்தே கெடயாது கரையான் புத்துக்குள்ளதான் போயிட்டு போயிட்டு வரும்

உமர் | Umar said...

//மறைமுகமா என்ன சாகச் சொல்றது குள்ளநரித் தனமில்லாமல் வேறென்ன//

கோண்டு சார் மாதிரி ஒரு பதில் போட்டா, இப்படி கோவிச்சுக்கிறீங்க?

Rajan said...

//சிலுக்கு எங்கிருக்காலோ, அதுதான் உண்மையான சொர்க்கம்! நீங்களா போறிங்களா, அனுப்பி வைக்கட்டுமா!?//


உங்க பார்பனத் திமிரை என்னிடம் காட்ட வேண்டாம் தல ! சிலுக்கை தேடி சொர்க்கம் போவதும் வைகுந்தம் போவதும் உம் விருப்பம்

வால்பையன் said...

//மறைமுகமா என்ன சாகச் சொல்றது குள்ளநரித் தனமில்லாமல் வேறென்ன//

கோண்டு சார் மாதிரி ஒரு பதில் போட்டா, இப்படி கோவிச்சுக்கிறீங்க? //


குள்ளநரிதனத்தின் அர்த்தம் நான் டுவிட்டரில் பேசியது ஆயிற்றே! உங்களுக்கு எப்படி தெரியும்!

Rajan said...

//இப்படி கோவிச்சுக்கிறீங்க?//

எவனாவது வந்து இப்பிடி எதுத்து பேசுநீங்கன்னா இந்த சண்டைக்கார சைக்கிள் கடக் காரன் சும்மா இருக்க மாட்டான் சொல்லிட்டேன்

வால்பையன் said...

//பாம்புக்குனு புத்தே கெடயாது கரையான் புத்துக்குள்ளதான் போயிட்டு போயிட்டு வரும்//


அப்போ சொந்த புத்து வச்சிகிறது தப்பா தல!

உமர் | Umar said...

//சொந்த புத்து வச்சிகிறது தப்பா தல! //
சின்ன புத்து வச்சிக்கிறதுதான் தப்பு

வால்பையன் said...

//உங்க பார்பனத் திமிரை என்னிடம் காட்ட வேண்டாம் தல ! சிலுக்கை தேடி சொர்க்கம் போவதும் வைகுந்தம் போவதும் உம் விருப்பம் //


டிக்கெட் செலவு மிச்சம்!
போறது ஆள் ரெடியா இருக்கு, நான் வேற யாரையாவது அனுப்பி வச்சிகிறேன் விடுங்க!

உமர் | Umar said...

//இந்த சண்டைக்கார சைக்கிள் கடக் காரன் சும்மா இருக்க மாட்டான் சொல்லிட்டேன் //

என்ன வார்த்தை சொல்லுவீங்க?

Rajan said...

//அப்போ சொந்த புத்து வச்சிகிறது தப்பா தல!

//

தப்பில்ல ஆனா உள்ள போனா பாம்பு வெளிய வரவே கூடாது ! வந்துட்டா அடுத்த பாம்பு பூந்துடும் அதுவும் தப்பில்லைன்னு அதர்வண வேதம் சொல்லுது கீதைல லார்டு கிச்சுனர் சொல்றார்.

வால்பையன் said...

//இந்த சண்டைக்கார சைக்கிள் கடக் காரன் சும்மா இருக்க மாட்டான் சொல்லிட்டேன்//


பார்த்து தல, சைக்கிள் பெல்லுக்கு சேதாரம் ஆயிறப்போவது!

Rajan said...

//சைக்கிள் பெல்லுக்கு சேதாரம் ஆயிறப்போவது!//

இது பெல்லு இல்ல பெல்லு இல்ல ! பெரிய பாறாங்கல்லு !

Rajan said...

//சின்ன புத்து வச்சிக்கிறதுதான் தப்பு//

புத்துல சிருசென்ன பெருசென்ன பாம்பு வர போக தானா பெருசாயிடுது
(இந்தாளு அசிங்கமா பேசறாரு அவைக்குறிப்பிலிருந்து நீக்கவும் )

வால்பையன் said...

//அதுவும் தப்பில்லைன்னு அதர்வண வேதம் சொல்லுது கீதைல லார்டு கிச்சுனர் சொல்றார். //

மகாபாரத்தத்துல கிச்சுனர் அவரு வளத்த பாம்பை அவரே கொன்னுபுடுவாராமே உண்மையா!?

முக்குக்கு கீழே கம்புளிபூச்சி இல்லாம இருக்குறதும், புத்துல பாம்பு இல்லாம இருக்குறதும் தெய்வ குத்தம்னு வேதத்துல இருக்காமே!?

Rajan said...

//என்ன வார்த்தை சொல்லுவீங்க?//

சேட்டான்னு சொன்னா கடன் குடுக்கமாட்டாணுக !

காட்டான்னு சொன்னா கடிச்சு வெச்சுடுவாணுக!

கோட்டான்னு சொல்லலாமா ?

Rajan said...

//முக்குக்கு கீழே கம்புளிபூச்சி இல்லாம இருக்குறதும், புத்துல பாம்பு இல்லாம இருக்குறதும் தெய்வ குத்தம்னு வேதத்துல இருக்காமே!?//

ஆமா ! அது ஒரு சமூகம் மட்டும்தான் கம்பளி பூச்சி இல்லாமலும் இருக்கலாம் தண்ணிப் பாம்பு இல்லாமலும் இருக்கலாமாம்

Rajan said...

//மகாபாரத்தத்துல கிச்சுனர் அவரு வளத்த பாம்பை அவரே கொன்னுபுடுவாராமே உண்மையா!?//

தன் பாம்போட தலைல ஏறி அவர் போட்ட குத்தாட்டத்துல சியர் லீடர்களேல்லாம் அசந்துட்டான்கலாம் ! ஆடுன ஆட்டத்துல பாம்பு ஸ்பாட்லயே அவுட்டாம் நூத்தி எட்டுக்கு போன் பண்ண சொன்னா கிச்சுனர் சண் மியூசிக்குக்கு பண்ணி மொக்கை போட்டுட்டாராம்

வால்பையன் said...

//நூத்தி எட்டுக்கு போன் பண்ண சொன்னா கிச்சுனர் சண் மியூசிக்குக்கு பண்ணி மொக்கை போட்டுட்டாராம் //


”குத்து” பாட்டு கேட்க ஆசை வந்துருக்கும்!

வால்பையன் said...

எங்கய்யா பின்னூட்டத்தையெல்லாம் காணோம், பாம்பு துக்கிட்டு போயிருச்சா!?

நாடோடி said...

ப‌ட‌ங்க‌ளுட‌ன் கூடிய‌ பாம்பை ப‌ற்றிய‌ விரிவான‌ விளக்க‌ம் அருமை....

Raju said...

\\எங்கய்யா பின்னூட்டத்தையெல்லாம் காணோம், \\

அதத்தான்யா நானும் கேக்குறேன்..!

வால்பையன் said...

//அதத்தான்யா நானும் கேக்குறேன்..!//


வந்துருச்சுல்ல!
நாங்க யாரு! எந்த புத்தாயிருந்தாலும் நோண்டி பார்போம்ல!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

வால் பையனின் ட்ரேட் மார்க் பதிவு! நன்றி வால்.
இதோ ராஜ நாகம் பற்றிய என் பதிவு.

http://prabanjapriyan.blogspot.com/2010/03/blog-post.html
(அதென்ன... தனி விண்டோவில் மாத்திரம் பின்னூட்டங்களை காண முடிகிறது?)

கையேடு said...

நல்ல தொகுப்புங்க.

அதே போல் மலைப்பாம்பின் கண்களுக்குக் கீழ் இருக்கும் வெப்பநிலை உணரும் உருப்பின் வெப்ப வேறுபாட்டை பகுத்தறியும் திறனுக்கு இணையாக இன்று வரை செயற்கையான வெப்பநிலைமானி கண்டு பிடிக்க முடியவில்லை.

Mythees said...

வணக்கம் உள்ளேன் !!!!!

கிரி said...

அருண் என்ன திடீர்னு பாம்பு பற்றி எல்லாம் எழுதறீங்க! ராஜன் சொன்ன மாதிரி தமிழ் டிஸ்கவரி வேலையா! :-)

குலவுசனப்பிரியன் said...

//மனிதனை தவிர வேறு எந்த விலங்குகளூம் தன் இனத்தை சேர்ந்த உயிரினத்தை கொல்வதில்லை என சர்வமுக்தி பெற்ற மிட்நைட் சாமியார்கள் திருவாய் மொழிவார்கள், ஆனால் அது உண்மையல்ல! துணைதேடும் ஆண் ராஜநாகம், சரியான துணை கிடைக்காத பட்சத்தில் எதிர்படும் எந்த பெண் ராஜநாகமாக இருந்தாலும் கொன்று விடும்!//
அதேபோல நான் டிஸ்கவரியிலேயோ, PBS-லோ பார்த்த காட்சிகள்:

ஆண்சிங்கம் தன் புது ஜோடியின் ஆண்குட்டி பின்னாளில் தன் தலைமைக்கு போட்டியாக வரக்கூடும் என்றால் அதை கொன்றுவிடுகிறது.

பிறந்த வரிக்குதிரை குட்டி எழுந்து நடக்கமுடியாமல் தள்ளாட, பொறுத்து பொறுத்து பார்த்த அம்மா கடைசியில் அதை கழுத்தை உடைத்து தூக்கி எறிந்துவிட்டு தன் கூட்டத்தினரின் போக்கில் போகிறது.

திருவள்ளுவரே ஆனாலும் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லையே.

வால்பையன் said...

//திருவள்ளுவரே ஆனாலும் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லையே//


வாங்க தல!
இது தான் நான் சொல்றதும் ஆனா யாரு கேக்குறா!

Rajan said...

//திருவள்ளுவரே ஆனாலும்//

அவங்கப்பனே ஆனாலும் அப்படித்தான்

வியா (Viyaa) said...

it really interesting when i am read..romba nalla irukku vaal paiyan,enakku animal patri any doubt irutha unggalidam thaan kettkanum pola :))

வால்பையன் said...

//enakku animal patri any doubt irutha unggalidam thaan kettkanum pola :))
/


தெரிந்ததை சொல்றேன் வியா!

Sanjai Gandhi said...

//ராஜன் said...

டிஸ்கவரி சேனல தமிழ்ல போட ஆரமிச்சாலும் ஆரமிச்சானுங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி
//

இது சூப்பரு.. :))

பின்னோக்கி said...

பாம்பைப் பற்றி பயப்படாமல் பல பயனுள்ள தகவல்களை அளித்திருக்கிறீர்கள்.

படம் பார்க்கும் போது கொஞ்சம் வயித்தைக் கலக்குது...

Unknown said...

நல்ல பகிர்வு தல..

smart said...

என்னங்க பாம்ப வணங்குனாலும் குத்தம், கொன்றாலும் குத்தம்

வால்பையன் said...

//என்னங்க பாம்ப வணங்குனாலும் குத்தம், கொன்றாலும் குத்தம்//

நான் பதிவெழுதுனதும் குத்தமா!?

smart said...

//மனிதனை தவிர வேறு எந்த விலங்குகளூம் தன் இனத்தை சேர்ந்த உயிரினத்தை கொல்வதில்லை என சர்வமுக்தி பெற்ற மிட்நைட் சாமியார்கள் திருவாய் மொழிவார்க//

அவைகளுக்குள்ளும் பகுத்தறிவு வந்திருக்கும் போல அதான் சுயநலனுக்கு மற்றவற்றைக் கொல்கிறது. ஆனால் மனிதனைத் தவிர எந்த விலங்குகளும் தன் இனத்தையே குறை சொல்லி அறிவாளியாக காட்டிக்கொண்டதில்லை என்று மிட்டே சாமியார்கள் திருவாய் மொழிகிறார்கள்

வால்பையன் said...

//மனிதனைத் தவிர எந்த விலங்குகளும் தன் இனத்தையே குறை சொல்லி அறிவாளியாக காட்டிக்கொண்டதில்லை //


நீங்கள் செய்யாத எதையும் புதிதாக நான் செய்யவில்லை!

anujanya said...

குரு, பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்த்து சொல்ல வந்தால் இப்படி பாம்பைக் காட்டி பயமுறுத்துறீங்களே :). இன்னும் பல்லாண்டு நல்வாழ்வு வாழ வாழ்த்துகள் வால்ஸ்.

அனுஜன்யா

வால்பையன் said...

//குரு, பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்த்து சொல்ல வந்தால் இப்படி பாம்பைக் காட்டி பயமுறுத்துறீங்களே :). இன்னும் பல்லாண்டு நல்வாழ்வு வாழ வாழ்த்துகள் வால்ஸ்.

அனுஜன்யா //


நன்றி தல!
நாளைக்கு தான் எனக்கு பிறந்தநாள்!
உங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கு நன்றி!

தமிழ் பொண்ணு said...

சாதனை புரிந்தாலும் சாகசம் செய்தலும் உன்னை போல ஒருவனும் இல்லை..
ப்ளாக் குகள் எழுதி எங்கள் மனதை தினம் ப்ளாக் செய்து விடுகிறாய்..
சமுகத்திற்கு உன்னுடைய உதவியால் சுமுகமாக வாழ வைக்கிறாய்..
ஆனால் என்னால் தான் உன்னை வாழ்த்த தகுதி இல்லாமல் தவிக்கிறேன்..
இனிய இந்த இரவு உன்னை மகிழ்ச்சியாக வைக்கட்டும்..
என்னுடைய வாழ்த்துக்கள் டு வால் பையன்...

வால்பையன் said...

@ சவுத் இந்தியா மூவீஸ்!

எத்தனை நாளா இந்த கொலைவெறி!

Chitra said...

ஆனால் மூட நம்பிக்கைகள் மனிதனின் பிரதான குணம் என்று ஆகிவிட்ட படியால் அறிவியல் கூற்றுகள் அவர்களுக்கு உளரலாக தன் தெரியும்!


...... நல்ல பிறந்த நாள் அறிக்கை......

இனிய பிறந்த நாள் மற்றும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Maximum India said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே!

பல்லாண்டு வாழ்க!

என்றும் அன்புடன்!

Prasanna said...

Titanic ஹீரோவ விட தூரமா துப்புது இந்த போட்டோல இருக்குற பாம்புப்பயபுள்ள :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அயர்லாந்தில் பாம்பு இல்லையாம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வணக்கண்ணா..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

மோனி said...

எச் சூச் மீ. இன்னிக்கு யாராவது கும்முறதுக்கு வறீங்களா?

லதானந்த் said...

Happy birthday to u.

வால்பையன் said...

நன்றி சித்ரா
நன்றி மேக்ஸ்
நன்றி பட்டாபட்டி
நன்றி லதானந்த்

மோனி said...

பிறந்தநாள் அன்று இவ்வளவு சிந்திக்கமுடியுமா!?

நான் பெரிய மங்குணியா இருந்திருக்கேன் தல!

இங்கேயும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துக்கள்!..........

வால்பையன் said...

நன்றி மோனி

Mythees said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல…

வால்பையன் said...

நன்றி mythees

மங்குனி அமைச்சர் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல , அப்புறம் பாம்பு முட்டை போடுமா இல்ல குட்டி போடுமா ?

வழிப்போக்கன் said...

உங்களுக்கு இவ்வளவுதானே தெரியும்.
சன் டி.வி. சீரியல் ஒன்றில் ஒரு நல்ல பாம்பு 5 நாட்கள் மோப்பம் பிடித்து ஒரு பெண்மணியைக் கடித்துக் கொல்லப்போகிறதே!

Unknown said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
சந்துரு

சூர்யா ௧ண்ணன் said...

நண்பரே! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Admin said...

//பாம்பின் விஷம் உயிர்காக்கும் மருந்தாக பயன்படுவது பலரும் அறிந்ததே!//

விஷமே மருந்து அன்று...,
மருந்தே விஷம் இன்று...!
என்ன உலகம்டா இது?

குடுகுடுப்பை said...

இங்கே ஸ்னேக் ஸ்நாக் கிடைக்குமா? கொஞ்சம் நடுக்கண்டம் பதமா வறுத்தா போதும்.

smart said...

அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்

முனைவர் இரா.குணசீலன் said...

பாம்பைப் பார்த்தாலே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!!

selventhiran said...

நல்ல பதிவு வால். காட்டுயிர்களைப் பற்றி உழைப்புடன் எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

வால்பையன் said...

பாம்புகளில் முட்டையிடும் வகைகளே அதிகம், அதே நேரம் நேரடியாக குட்டியை ஈனும் பாம்புகளும் உண்டு!
ஊர்வனவற்றில் இதுவரை பாலூட்டிகள் கண்டுபிடிக்கபடவில்லை!

அஷீதா said...

ennanga idhu.. ennai maadhiri chinna pullaiya ellam ippadi bayamuruthiteenga..

nalla irukkunga unga article. :))

ராஜவம்சம் said...

5ந்து தலை நாகம் உண்டா இல்லையா

வால்பையன் said...

குட்டி பிறக்கும் குழந்தைகள் போல் இரட்டை தலையுடன் லட்சத்தில் ஒரு பாம்பு பிறக்கலாம், ஐந்து தலையெல்லாம் சான்ஸ் இல்ல! அது சும்மா டுபாக்கூர்!

Uma said...

ஊரில் இல்லாததால் தாமதமாக - பிறந்தநாள் வாழ்த்துகள்!

Unknown said...

பாம்பில் எத்தனையோ விசயங்கள் இருப்பது தெரிந்தாலும் விலாவாரியாக சொல்லியதற்கு நன்றி சார்.

S.SETHU RAMAN said...

article arumai
visit my site
vaalpaiyyan.blogspot.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தல, கடல் பாம்புகளப்பத்தி சொல்லாம விட்டுடீகளே? கடல் பாம்புகளும் விசம் நிறைந்தவை. உலகில் அதிக சக்தி வாய்ந்த விசம் உள்ள உயிரினம் ஆஸ்திரேலியக் கடற்கரைகளில் காணப்படும் பாக்ஸ் ஜெல்லிஃபிஷ்கள் (இது பாம்புகள் இனத்தில் வராது).

Dr.Dolittle said...

நல்ல சிறப்பான பதிவு பாஸ் , இருந்தாலும் atropine ( though called as univesrsal antitode ) எல்லா பாம்பு விஷத்துக்கும் முருவி கிடையாது , antitode போட்டுகொள்வது சாலசிறந்தது , தைபேன் என்ற பாம்பு வகை மிகவும் விஷம் வாய்ந்தது என்பது எனது கருத்து.

Unknown said...

very Nice, Thank u.

Unknown said...

very nice. thank u

Unknown said...

முட்டைகளை மட்டுமே உண்ணக்கூடிய பாம்பு வகைகள் உள்ளன.மாறாக அவைகள் நம் தமிழ் சினிமாவில் காட்டப்டுவதுபோல் முட்டையில் ஒரு துளையிட்டு குடிப்பதில்லை.. முட்டையை அப்படியே விழுங்கி உடலின் உள்ளேயே உடப்புறமாக சற்று நீண்டிருக்கும் தம் விசேட முதுகெலும்பு நீட்சிகளை பயன்படுத்தி உடைத்து சத்துமிகுந்த யோக் எனப்படும் திரவத்தை உள்ளே அனுப்பிவிட்டு ஓட்டை வெளியே துப்பிவிடும்.

!

Blog Widget by LinkWithin