வா மு கோமுவின் நாவல்கள் வெளியீட்டு விழா

வா மு கோமுவின் இரண்டு நாவல்களை உயிர்மை வெளியிடுகிறது. அதற்கான விழா வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி மாலை நடக்கிறது. விவரங்கள் கீழே :

உயிர்மையின் 10 நூல்கள் வெளியீட்டு விழா

நாள் : 1-1-2012, ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், LLA பில்டிங், 735 அண்ணா சாலை, சென்னை - 2.

நூல்கள் :

ஒன்றுக்கும் உதவாதவன் (அ முத்துலிங்கத்தின் கட்டுரைத் தொகுப்பு)
சகுனம் (எஸ் வி ராமகிருஷ்ணனின் கட்டுரைத் தொகுப்பு)
இசையின் ஒளியில் (ஷாஜியின் கட்டுரைத் தொகுப்பு)
கால்கள் (ஆர் அபிலாஷின் நாவல்)
மங்கலத்து தேவதைகள் & எட்றா வண்டியை (வா மு கோமுவின் நாவல்கள்)
நீர்த்துளி (சுப்ரபாரதி மணியனின் நாவல்)
வேட்டை (சுப்ரபாரதி மணியனின் சிறுகதைகள்)
வானில் பறக்கும் புள்ளெல்லாம் (சு. தியோடர் பாஸ்கரனின் கட்டுரைகள்)
கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும் (சு.கி. ஜெயகரனின் கட்டுரைகள்)

பங்கேற்போர் :

எஸ் ராமகிருஷ்ணன்,
அசோகமித்திரன்
பாலாஜி சக்திவேல்
மிஷ்கின்
ஸ்ரீனிவாஸ் (பின்னணி பாடகர்)
ந முருகேச பாண்டியன்
பாமரன்
இந்திரன்
தமிழ்மகன்
வே தட்சிணாமூர்த்தி
அ முத்துக்கிருஷ்ணன்

நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

முல்லைப் பெரியாறு - மெரீனாவில் ஒன்றுகூடல்..!

நேற்று காவிரியை மறுத்தார்கள்; இன்று முல்லைப் பெரியாறை மறுக்கிறார்கள். நாளை பாலாறு, பவானி ஆறு மறுக்கப்படும். தமிழகம் பாலையாகும்; தமிழன் தமிழ்நாட்டிலேயே அகதியாவான்.





நேற்று தமிழீழத்தில் 1.5 லட்சம் தமிழர்களும், தமிழகக் கடற்கரையோரங்களில் 543 மீனவர்களும் கொல்லப்பட்டனர். இன்று கேரளாவாழ் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். நாளை தமிழகத்தில் வாழும் நாமும் தாக்கப்படலாம். நம் தமிழனைக் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க, நம் வாழ்வின் ஒரு மணி நேரத்தை நாம் ஒதுக்கமாட்டோமா?

நம் தமிழ் சொந்தங்களுக்காக வரும் டிசம்பர் 25 ஞாயிறு அன்று மெரீனா கடற்கரையில், நீதி கேட்ட கண்ணகி சிலை அருகே மாலை 3 மணிக்கு ஒன்று கூடுவோம். கம்பம், போடி, தேனி மக்களுக்காக துணை நிற்போம்

சங்கமம்‘2011 அழைப்பு

சங்கமம்-2011

இணையச் சிலந்திக்கூட்டில் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மை ஒரு கோட்டில் மீண்டும் இருத்திப்பார்க்க, இந்த ஆண்டும் ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் அழகானதொரு சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

வலைப்பக்கம்(blog), WordPress, Facebook, Twitter, BUZZ போன்ற பல தளங்களில் உறவாடும் இணைய உறவுகளை ஒன்று திரட்டி அகமகிழும் முகமாக ”சங்கமம் 2011” எனும் கூடல்த்திருவிழா ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

2009, 2010ஆம் ஆண்டுகளில் இது போன்ற கூடல்கள் மிகச் சிறப்பாக நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இந்த ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளின் சங்கமம் குறித்த இடுகைகள்.

2009 சங்கமம்
2010 சங்கமம்

எங்கு, எப்போது, என்ன?

சங்கமம்-2011 நிகழ்வு 18.12.2001 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என எங்கள் குழு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் சங்கமம்?

ஏன் இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில் இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே ஊட்டுகிறது.

எல்லாச் சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத் தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து, புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்தக் கூடல்.

கலந்துகொள்ள:

முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011 நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு


தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

இது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு உறுதிப் படுத்தியதையொட்டியே நிகழ்வுக்கான இருக்கைகள், உணவு ஏற்பாடு செய்யமுடியும். இவ்வளவு வலியுறுத்திக் கேட்பதன் மிக முக்கியக்காரணம் மதியம் சைவ / அசைவ உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சரியான எண்ணிக்கை தெரியாத போது உணவு போதாமல் அமையவோ, கூடுதலாக அமைந்து வீணாகவோ வாய்ப்பிருப்பதை முற்றிலும் தவிர்க்கவே. நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.


மேலதிக விபரங்களுக்கு:

தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி (செயலர்) 90037-05598,
கார்த்திக் (பொருளர்) 97881-33555,
ஆரூரன் - 98947-17185 ,
கதிர் – 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர் - 98658-39393,
ராஜாஜெய்சிங் - 95785-88925,
சங்கவி – 9843060707

நிகழ்வின் வெற்றியும் சிறப்பும் தங்கள் கைகளில் மட்டுமே அமைந்திருக்கின்றது என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராக இருக்கின்றோம்.

பங்கு வணிகத்தில் நட்டம் ஏன்?

வர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியான தொலைநோக்கு பார்வை வேண்டும். பெரும்பாலோர் புரிந்து கொள்ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித்த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்பது. எந்த வர்த்தகத்தில் இது சாத்தியம்? பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங்கள் எதிர் பார்க்கும் லாப சதவிகிதம் தான் உங்கள் ரிஸ்க் சதவிகிதமும்.

நீங்கள் பூ விற்கலாம், உணவு பொருள் விற்கலாம், பிளாஸ்டிக் பொருள் விற்கலாம். பூ ஒரே நாளில் கெட்டுவிடும், உணவு பொருள் இரண்டு நாள் வரை தாங்கலாம், பிளாஸ்டிக் பொருள் அழியாமல் இருக்கும். அதே அளவு லாப அளவும் இருக்கும் என்பது தான் வியாபார உண்மை. நீங்கள் என்ன வியாபாரம் செய்ய போகிறிர்கள் என்பதில் தான் உங்கள் தொலைநோக்கு பார்வை இருக்கிறது. இன்றே லாபம் வேண்டுமென்றால் அதற்கான ரிஸ்கையும் புரிந்து கொள்ளவேண்டும்.




மார்கெட் குறியீட்டு எண் சரிந்த போதும் பல நிறுவன பங்குகள் நல்ல முறையில் ஏறி கொண்டிருந்தது. தினம் பல செய்தி தளங்களில் அந்த செய்தியும் வருகிறது, அதையெல்லாம் படிக்க நமக்கு ஒரு மணிநேரம் போதுமானது. நான் ஏற்கனவே இந்த பதிவில் சொன்னது போல் உங்கள் முதலீட்டை ஒரு வருடத்தில் இரட்டிப்பாக்கினாலே போதும் பத்தாவது வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர். தெளிவான பார்வை போதும். சரியான திட்டமிடல் போதும்.

சில ஆலோசகர்கள் சரியில்லை அதனால் தான் நட்டமடைந்தேன் என்கிறார்கள். நான் அலோசகார இருந்த பொழுது வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு சொல்வேன். நான் 5 கால் தருகிறேன் ஒவ்வொன்றும் 1000 லாபம் அதே நேரம் ஸ்டாப்லாஸ் 200௦௦ இருக்கும். 4 கால் தோல்வி அடைந்தாலும் ஒரு காலில் 1000௦௦௦ லாபம். ஆக மொத்தம் 200௦௦ லாபம் தான். ஸ்டாப்லாஸ் போடாமல் நீங்கள் செய்யும் வர்த்தகம் ரிஸ்கானது. அதை புரிந்து கொண்டால் உங்களால் தினசரி வர்த்தகத்திலும் லாபம் பார்க்க முடியும்.

ஆலோசனைக்கு தொடர்பு கொள்க : 9994500540

!

Blog Widget by LinkWithin